Tuesday, February 9, 2010
சரத் பொன்சேகா கைதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம்
நேற்று இரவு முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ராணுவப் போலீசால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து நடத்தும் இந்த போராட்டம் குறித்து இன்று காலை அவர்கள் ஊடகவியலாளர்களையும் சந்திக்கவுள்ளனர்.
இதேவேளை மோசடிகள் மற்றும் பிற ராணுவ குற்றங்களுக்காகவே சரத் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடந்து கொண்டிருப்பதால் விரிவான அறிக்கை பின்னர் வெளிவிடப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இதேவேளை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத் தலைவர் லக்ஷ்மன் ஹுலுகல்ல, அரச தொலைக்காட்சியொன்றுக்கு பேசியபோது, சரத் பொன்சேகாவை ராணுவ நீதிமன்றில் நிறுத்தவுள்ளதாகக் கூறியுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment